amutha malai polikirathu

வெள்ளி, 16 நவம்பர், 2012


பெண்களின் அழகை குறிவைத்து எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
உடை அலங்காரத்திற்காகவும், முகஅழகுக்காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பரப்படுத்தப்படுபவை ஏராளம்.
ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில்லை. உள ரீதியாக தன்னம்பிக்கை அதிகரித்தால் பெண்களின் அழகு கூடும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
தன்னம்பிக்கை
அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டுமல்ல அது உள்ளம் தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர்கள். எங்கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ அங்கே அழகு மிளிரும் என்பது அவர்களின் கூற்று. உள்ளத்தில் தன்னம்பிக்கை ஒளி உண்டானால் முகத்தில் பொலிவு கூடும் என்பது வல்லுநர்களின் கருத்து.

அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக அதிபராகியிருக்கும் 13வது தலைவர் என்ற பெருமையை பாரக் ஒபாமா பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் 44வது அதிபராக அவர் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி பொறுப்பேற்கிறார்.

அமெரிக்க வரலாற்றில் அதிக நாட்கள் அதிபராக இருந்தவர் ப்ராங்ளின் ரூஸ்வெல்ட். மூன்று முறை, அதாவது 12 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தவர், நான்காம் முறையும் அதிபராகி 83 நாட்களில் இறந்துவிட்டார்.
1955 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டப்படி, ஒரு தலைவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரு தடவை அதிபராக இருக்கலாம். அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் போட்டியிடலாம்

வியாழன், 1 நவம்பர், 2012

முதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உறவு வைத்தாக வேண்டும் என்ற ஐதீகம் நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண்ணம் நிலவுவதே இதற்குக் காரணம். அன்று நாம் நிச்சயம் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மனைவியோ அல்லது கணவரோ தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயமும் இதற்கு இன்னொரு காரணம்.


அதேசமயம் முதல் நாளிலேயே உறவு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி முதலிரவு நாளன்று உறவு வைத்துக் கொள்வதில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அன்றைய தினம் தவிர்ப்பது என்பதும் நல்ல விஷயம்தான் என்கிறார்கள் டாக்டர்கள்.
குறிப்பாக, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்று வரும்போது, அந்த மணமகனும் சரி, மணமகளும் சரி அதற்கு முன்பு வரை பார்த்திருக்க மாட்டார்கள், பேசியிருக்க மாட்டார்கள், இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருவிதமான இறுக்கமான மன நிலையுடன்தான் இருவரும் தனியறையில் சந்திக்கிறார்கள். எனவே முதலில் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த முதலிரவைப் பயன்படுத்தலாம் என்பது டாக்டர்கள் மட்டுமல்லாமல், மன நல மருத்துவர்களின் அறிவுரையும் கூட.

புதன், 31 அக்டோபர், 2012

சமூக வலைத்தளங்களின் மூலம் இலகுவில் மோசடியில் சிக்குபவர்கள் ஆண்கள் தானாம். பெண்கள் இந்த மாதிரி விடயங்களில் சிக்கிக்கொள்வது மிகவும் குறைவாம்.

இதற்கு மோசடியாளர்கள் அதிகமாக பெண்களை பயன்படுத்தியே தமது வலையை விரிக்கின்றனர். இதனால் பெண்களை விட ஆண்களே இந்த மாதிரி சில்மிஷங்களில் சிக்கித்தவிக்கின்றனர்.
மற்றும் அமெரிக்காவில் 1,649  பேரளவில் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆண்கள் பெண்களை விட இலகுவில் செக்ஸுக்கு மயங்குவார்கள். கிடைக்கும் ஒவ்வொரு பந்துக்கும் சிக்ஸர் அடிக்க துடிக்கும் ஆண்களே இவ்வாறு சிக்கல்களில் மாட்டுவதாக அந்த ஆய்வு மேலும் விவரிக்கிறது.
ஒரு சில பெண்களுக்கும் இதே செக்ஸ் குறை காரணியாக இருக்கிறது. இவர்களையும் இலகுவாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மடக்கி விட முடியும்.
facebook பாவிக்கும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆண்களுக்கு வரும் friend request க்கு ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம்.
ஆனால் பெண்கள் தமக்கு தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore செய்கிறார்கள். கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான் ஆப்புகள் அதிகமாக சொருவப்படுகின்றன.
 இவ்வாறானவர்களுக்கு தங்களது ரகசிய விடயங்களை பகிர்வதும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
இதுபோன்ற சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவை. இவற்றில் வாழ்க்கையை தொலைத்து பின் தேடுவது முட்டாள் தனமானது.
கண்முன்னே பார்ப்பதெல்லாம் கவர்ச்சியாக தோன்றினாலும் உள்ளிருக்கும் ஆபத்து பின்னாளில் தான் தெரியவரும்.
தாம்பத்திய உறவிற்குபின்னர் தங்களுடன் சின்ன சின்ன முத்தமிடல், தழுவல், அரவணைப்பு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் என்றும் பெரும்பாலான பெண்கள் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் உறவின் போது பெரும்பாலான ஆண்கள் சுயநலமிகளாக நடந்து கொள்வதாக பெண்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

தாம்பத்ய உறவு என்பது இருவழிப்பாதையாக இருக்கவேண்டும். தம்பதியர் இருவரும் மனம் ஒன்றி ஈடுபட்டால் மட்டுமே அதில் மகிழ்ச்சி நீடித்திருக்கும்.

தாம்பத்திய உறவிற்கு முந்தைய விளையாட்டுக்களைத்தான் அனைவரும் விரும்புவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உறவிற்கு பிந்தைய விளையாட்டுக்கள் இருந்தால்தான் அன்றைய உறவு முழுமையடையவதாகவும், முழு திருப்தியுடன் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஓரவிழிப் பார்வையாலேயே ஆண்களை கவர்ந்துவிடுகிற சக்தி பெண்களுக்கு உண்டு. ஆனால், ஆண்களால் அவ்வாறு பெண்களை தங்கள் வலையில் எளிதில் வீழ்த்த முடியாது. சிலருக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்கும். ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
இவை ஒரு புறம் இருக்கட்டும். கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு, “மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்” என்ற வரையறையையும் தாண்டி கணவன்- மனைவியர் மிகவும் அன்யோன்யமாக வாழ்வது என்பது இன்றைய காலக்கட்டத்தில் குறைந்து விட்டது என்றே கூறலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன், மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்து கொண்டு வாழும்போது தான் தம்பதியர் வாழ்க்கையில் சந்தோஷம் பூக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே பிரச்சினையாகி விடும்.
மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனைவி சொல்வதை அப்படியே சில கணவன்மார்கள் கேட்பார்கள். அதனால் தான் அப்படிச் சொன்னார்கள். இதேபோல், கணவன்மார்கள் சொல்வதை அப்படியே அவர்களது மனைவியர் கேட்க வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறை இருக்கிறது. அன்பாக,
பிரேசில் நாட்டு மாணவி, ( 20 வயது) தனது கற்பை இணைய தளத்தில், ஏலம் விட்டுள்ளார். ஜப்பானை சேர்ந்தவர் 4.5 கோடிக்கு இந்த பெண்ணின் கற்பை ஏலம் எடுத்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த, உடற்பயிற்சி கல்லூரி மாணவி, கட்டாரினா மிக்ளியோரினி, 20. இவர் சமீபத்தில், தனது கற்பை ஏலம் விடப்போவதாக இணைய தளத்தின் மூலம் அறிவிப்பு வெளியிட்டார். ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்போவதாக, தனது ஏல அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்தியர் ருத்ர சாட்டர்ஜி, ஜப்பானை சேர்ந்த நாட்சு உள்பட 15 பேர், கட்டாரினாவின் கற்புக்கு ஏலம் கோரியிருந்தனர். ஆனால், ஜப்பான் நாட்டுக்காரர் நாட்சு, அதிக பட்சமாக, 4.5 கோடி ரூபாய்க்கு, கற்பை ஏலம் எடுத்தார். இந்த தொகைக்கு ஈடுகொடுக்க முடியாத ருத்ர சாட்டர்ஜி உள்ளிட்டோர், பின் வாங்கி விட்டனர்.
நாட்சு, விலை பேசி விட்டதால், அவரிடம் முறைப்படி, கட்டாரினா, தனது கற்பை ஒப்படைக்க உள்ளார். இதற்காக நாட்சுக்கு விமானம் ஒன்றை அனுப்பி அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட ரகசியமான இடத்தில் “கற்பு’ ஒப்படைக்கப்பட உள்ளது.இதில் குறிப்பிடதக்க விடயம் என்னவெனில் 20 வயதுக் கன்னியுடன் உறவு வைக்க 1030 மில்லியன் ரூபாவுடன் போட்டிக்கு வந்த இந்தியர்!

திங்கள், 29 அக்டோபர், 2012

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி. ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது.

வர்மம் என்றால் என்ன?
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012


முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
ஒரு நெல்லிக்கனியில் 482.14  என்னும் அதிக சக்தி வாய்ந்த  ஆண்டி ஆக்ஸிடேட்  என அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

காத‌லி‌க்கத் தொட‌ங்‌கிய நேர‌த்‌தி‌ல் ‌நிறைய மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசுவா‌ர்க‌ள். ஆனா‌ல் பெரு‌ம்பாலான காதல‌ர்க‌ளி‌ன் பே‌ச்‌சி‌ல், அவ‌ர்களை‌ப் ப‌ற்‌றிய ‌விஷய‌ங்களை ‌விட, அவ‌ர்களது குடு‌ம்ப‌ம், ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ற்‌றிய ‌விஷய‌ங்க‌ள்தா‌ன் அ‌திகமாக இரு‌க்கு‌ம்.
ஒருவரை ஒருவ‌ர் ந‌ன்கு பு‌ரி‌ந்து கொ‌ள்ள, த‌ங்களை‌ப் ப‌ற்‌றிய ‌விஷய‌ங்களை‌ப் ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம். ஆனா‌ல், த‌ன்னை‌ப் ப‌ற்‌றியு‌ம், தன‌க்கு‌ நெரு‌ங்‌கியவ‌ர்க‌ள் ப‌‌ற்‌றிய ரக‌சிய‌ங்களையு‌ம் சொ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ந்த அவ‌சியமு‌ம் இ‌ல்லை.

வியாழன், 26 ஜூலை, 2012

பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும்.
படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?
1. தினமும் படுக்கும் முன் 5-10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும் போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்.
2. படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.
இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது. ஆகவே அப்போது இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டு மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம்.
அதனால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். ஏனெனில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், கூந்தலை வளர்ச்சியடையும்.


உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?
சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை தவிர்த்து விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். ‘வாட்டர் பேஸ்ட் மேக்கப்’ போட்டுக் கொள்ளுங்கள். ஓயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மாற்றம் செய்ய முடியாமல் இருக்கிறதா?
இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.

திங்கள், 11 ஜூன், 2012



புதிதாக திருமணமான தம்பதியர் முதன் முதலாக தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது நல்ல, நேர்மறையான எண்ணங்களை மனதில் நினைக்க வேண்டும் என்று காமசூத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் ஆரோக்கியமான, புத்திசாலியான குழந்தைகள் பிறக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.தாம்பத்ய உறவில் இணையும் தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்வதில் அனுசரிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. படுக்கை அறைக்குள் செல்லும் முன்பாக பெரியோர்களை மதித்து அவர்களிடம் நல்வாக்குப் பெற வேண்டும். உறவில் ஈடுபடும் வேளையில் ஆண், பெண்ணின் மனதில் நல்ல சிந்தனைகளே ஓட வேண்டும். பெண், மனம் லயிக்கும் இசைகளைக் கேட்க வேண்டும். ஆன்மீக சிந்தனை வேண்டும். பிறர்க்கு உதவிடும் எண்ணம் வேண்டும். அறிவுக்கு விருந்தாகும் சிறந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்து வந்தால் தான், கருவில் உருவாகும் குழந்தை, அதே போல, நல்ல திறமைசாலியாக, பிறர்க்கு பயன் உள்ளவனாக, சாதனையாளனாக வர முடியும் என்கிறது காமசூத்திரம்.



உணவுக்கும் உறவுக்கும் தொடர்புண்டா என்று கேட்டால் உண்டு என்கின்றனர் உளவியலாளர்கள். நாம் உண்ணும் உணவு நம் உடலில் செயல்புரிந்து நம்முடைய பாலுணர்வை தூண்டுகின்றனவாம். அதனால்தான் பாலுணர்வில் ஈடுபாடு இன்றி இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த உணவுகளைக் கொடுத்து தயார் படுத்துகின்றனர். அதேபோல் இதயத்திற்கு இதம் தரும் உணவுகள் எல்லாம் தாம்பத்ய உறவுக்கு ஏற்ற நலம் தரும் உணவுகள்தான் என்கின்றனர் நிபுணர்கள். இதோ அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

என்னென்ன சாப்பிடலாம்

செக்ஸ் குறைபாடு இருந்தால் மருத்துவரிடம் சென்று லட்சக்கணக்கில் அழவேண்டாம் வீட்டில் சரியான சத்தான உணவுகளை சமைத்து உண்டாலே போது தம்பதியரிடையே தொடர் வெற்றிதான் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்டுகள்.

சனி, 28 ஏப்ரல், 2012

மயக்கும் மாலை பொழுதிற்கு பாய் சொல்லி இன்ப நிலவாய் வரும் இரவை நோக்கி வரவேற்க காத்திருக்கும் பொழுது  உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல்  படங்களை அல்லது  புக் எதையாவது படித்துக் கொண்டிருக்கிறாரா…… கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை.

நாமதான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தினால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லாவிட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட்னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன சில்மிஷங்கள் மூலம் நாம் அறிந்து உறவுக்குள் புகலாம்.

நீங்கள் பெண்ணாக இருந்தால்  என்ன செய்ய வேண்டும்

சொக்க வைக்கும், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உள்ளாடைகளுக்கு மாறுங்கள். நிச்சயம் உங்களவர் திசை திரும்புவார்.பாத்ரூமுக்குள் புகுந்து ஜில்லென்று ஒரு குளியல் போட்டு தலையில் ஈரம் சொட்டச் சொட்ட, ஒரே ஒரு துண்டை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அப்படியே வாருங்கள். துண்டு நழுவப் போவது இப்பவா, அப்பவா என்ற ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர்.
பெரும்பாலான பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் பெரிய லிஸ்ட்டே தருவார்கள் ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய  கொடுப்பார்கள். அதில் சில

பெரும்பாலான ஆண்களை பொருத்தவரை செக்ஸ் உறவு என்பதை உடல்ரீதியான விஷயமாகவே கருதுகிறார்கள். ஆனால் பெண்களைப் பொருத்தவரை அப்படி இல்லை அதை மனதோடும் சம்பந்தப்படுத்தி உண்மையான இன்பத்தை அனுபவிப்பவர்கள் பெண்கள் தான். உடலும், மனதும் இணையும் நிகழ்வாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.

சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான ஈடுபாட்டை தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம். எனவே உங்களது துணைக்கு இசை பிடிக்குமா, இல்லையா என்பதை அறிந்து கொண்டு இசையை  கேட்பதா வேண்டாமா என முடிவு செய்யுங்கள்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012


ஜோதிட சாஸ்திரத்தைப் பார்க்கும்போது முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்பது அனைத்தும் உண்மை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதாவது லக்னாதிபதி யாருடன் சேர்ந்திருக்கிறார், யாருடைய பார்வை பெற்றிருக்கிறது என்பதை வைத்து அவர் முற்பிறப்பில் என்னவாக இருந்திருப்பார், இந்த பிறவியில் அவரது செயல் எவ்வாறு இருக்கும் என்பதை அறியலாம்.

மேலும், ஏழேழு ஜென்மம் என்பதும் உண்டு. அணு ஜென்மம், கிரி ஜென்மம், புனர் ஜென்மம் என்பதும் உண்டு. லக்னாதிபதியை வைத்து அவரது மறுபிறவிகளை அறியலாம்.

பொதுவாக 12ஆம் இடத்தில் கேது இருந்தால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை. மோட்சக் காரகன் கேது. 12ஆம் இடம் மோட்சத்திற்குரிய இடம். மோட்ச ஸ்தானத்தில் மோட்சக் காரகன் இருந்தால் மறுபிறவிக் கடலை நீந்தி மோட்சத்தை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் 12வது இடத்தில் கேது இருந்தாலோ அல்லது 12க்குரியவன் 12ம் இடத்திலேயே இருந்தாலும் மறுபிறவி இல்லை.

5ஆம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. 5ஆம் இடத்தை வைத்தும் முப்பிறவி, அடுத்த பிறவியைப் பற்றி அறியலாம்.

அதாவது லக்னாதிபதி எந்த கிரகத்தில் இருக்கிறது, லக்னாதிபதியை எந்த கிரகம் பார்க்கிறது, லக்னாதிபதியின் பார்வை எந்த கிரகத்தின் மீது இருக்கிறது என்பதை கணித்தால் அவர்களது முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு பற்றி கணித்துவிடலாம்.

இந்தப் பிறவியில் ஒருவர் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முற்பிறவியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

ஒருவரது முப்பிறவியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு குழந்தை பிறந்த நாள், நேரம் கொடுத்தால் போதும். அந்த நாளில் இருந்து 10 மாதங்கள் பின்னோக்கிச் சென்று அந்த கரு உண்டான நேரத்தில் அது எவ்வாறு இருந்தது என்பதை கணித்து முப்பிறவியைப் பற்றி அறிவார்கள். முப்பிறவியைப் பற்றிய அறிய அந்த முறை சிறப்பாக அமையும்.

வியாழன், 26 ஏப்ரல், 2012


இந்து சமயத்தின் மடியில் வளர்ந்த பௌத்த சமயமும் சமண மதமும் இந்து வேதங்களில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டவையாயினும், மறுபிறப்பையும் கர்மாவையும் தமது ஆதார தத்துவங்களாக ஏற்றுக் கொண்டவை.

கிறிஸ்துவுக்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளை ஆராயுமிடத்து, அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியக் கிடைக்கின்றது.

கிறிஸ்துவுக்கு முன் 6 ம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் பரவியிருந்த ஆர்பியஸ் வழிபாட்டு மரபில் (Orphic Cult) மனிதன் பிறப்புகள் தோறும் ஆன்மீக உயர்வு பெற்று இறுதியில் பிறப்பு – இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறான் என்ற நம்பிக்கை இருந்து வந்தது.

இந்து மதத்துக்கே உரியதான இத் தத்துவம் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்த அக்காலத்து கிரேக்க வணிகர்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

ஆதிகால கிரேக்க சமய மரபுகள் (Greek Gnosticism) இந்து சமய நம்பிக்கைகளை ஒத்திருக்கக் காணப்படுகின்றன.

எம்பிடொக்கில்ஸ், பைதகொறஸ் போன்ற பேரறிஞர்கள் மறுபிறப்புத் தத்துவத்தை மக்கள் மத்தியில் கூறிவந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து பிளாட்டோவும் மறுபிறப்பு நம்பிக்கையை வலியுறுத்தினார்.
யூதர்களின் வழிகாட்டியும், அவர்களின் சமயக் கோட்பாடுகளுக்கு ஆரம்ப வித்திட்டவருமான மோசஸ் பரப்பிய “கபாலா” தத்துவம் மறுபிறப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆனால் பின்னால் வந்த “மிஷ்னா”, “தல்முட்” என்ற யூத போதனைகளில் இத்தத்துவம் ஏனோ வலியுறுத்தப்படவில்லை.

ஆரம்பகால கிறிஸ்தவ தத்துவங்களிலும் சிந்தனைகளிலும் மறுபிறப்பு நம்பிக்கையின் பிரதிபலிப்புகள் இருந்ததென்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
கி.பி. 538 – ம் ஆண்டின் கான்ஸ்டான்ட்டினோபிளில் நடைபெற்ற மகாநாட்டில் (Council of Constantinople) தான் முதல் தடவையாக ஜஸ்ரீனியன் என்ற பேரரசன் மறுபிறப்பில் நம்பிக்கை வைப்பது திருச்சபைக்கு இழிவு ஏற்படுத்தும் செயல் (Anathema) என்று சட்ட மூலமாகப் பிரகடனப்படுத்தினான்.

இஸ்லாம் மதத்தின் “சூஃபி” (sufi) பிரிவைச் சேர்ந்த மறைஞானி ஜெலாலுதீன் றூமி என்பவர் இவ்வாறு பாடினார்.

“நான் கனிப்பொருளாயிருந்தேன். பின், இறந்து
தாவரமாகினேன். பின் மிருகமாகி அவ்வுடலையும்
துறந்து மனிதனாகினேன். இறப்பதற்கு ஏன் நான்
பயப்படவேண்டும்? இறப்பதால் தான் நான்
உயர்வடைகிறேன். ஒரு காலத்தில் நான் தேவதூதர்
ஆவேன்…………………” 

(ஆதாரம் The mystics of Islam by Reynold.A Nicholson).
இப்பாடல் மாணிக்கவாசக சுவாமிகளின் பின்வரும் திருவாசகத்தை நினைவுறுத்துகிறது.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவாராயத் தேவராய்ச்
செல்லா அநின்றவித் தாவர சங்கமத்து
ளெல்லா பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்”.

மனிதன் முக்தியடையும்வரை அவனுடைய ஆத்மா பிறப்பெடுத்துக்கொண்டேயிருக்கு
ம் என்று இந்து சமயம் புகட்டுகிறது.

கி.மு. 5 – ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கசரித்திர ஆசிரியர் ஹெறோடொற்றஸ் (Herodotus) என்பவர் “எகிப்தியர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாயிருந்தனர் மனிதனின் ஆத்மா அழிவற்றது. மனிதன் இறந்தவுடன் இன்னொரு உடலினுள் அவனுடைய ஆத்மா புகுந்து விடுகிறது என்று நம்பினார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

அலெக்சாந்திரியாவின் கிளமேந்து என்னும் போப்பாண்டவர் (2ம் நூற்றாண்டு) அதேகாலத்துப் பேரறிஞர் ஓறிஜின் ஆகியோரும் மறுபிறப்பு தத்துவத்தில் தமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.

ஜெருசலத்தில் பிரம்மாண்டமான தேவாலயத்தை நிறுவிய இஸ்ரவேல் நாட்டின் புகழ்பெற்ற மன்னன் சொலமன் (கி.மு 970 – 933) வெளியிட்ட “அறிவுக்களஞ்சியம்”  (book of wisdom) என்ற தனது நூலில் “நான் நல்லவனாயிருந்ததால் எனது ஆத்மா ஒருநல்ல உடலில் புகுந்து கொண்டது” என்று கூறியுள்ளார்.

மேற்கு நாட்டு அறிஞர்கள் பலர் மறுபிறப்பில் தமக்கு உண்டான நம்பிக்கையை தங்கள் நூல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த Samuel Alexander (1859 – 1939) பிறான்ஸ் தேசத்தைச் சேர்ந்த Henri Bergson (1859 – 1941) ஆகியோர் முக்கியமானவர்கள். அமெரிக்கப் பேரறிஞர் எமேர்சனும் (1803 – 82) மறுபிறப்புத் தத்துவத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த டாக்டர் இவான்ஸ் வென்ஸ் (Dr. Evans Ventz) ஒரு ஞான ஆராய்ச்சியாளர். இவர் 1958ம் ஆண்டு இலங்கை வானொலியில் உரையாற்றிய பொழுது, “இன்னும் ஐம்பது வருடங்களில் விஞ்ஞானிகள் மறு பிறப்புத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டுவிடுவார்கள்” என்று கூறினார்.

இன்றைய சமுதாயம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்ந்தறிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத எதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் சுபாவமுடையது. இருந்தும் இறப்புக்குப் பின் ஏதோவொரு வகையில் மனித வாழ்வு தொடர்கின்றது என்ற நம்பிக்கை இப்போது உலக மக்கள் மத்தியில் பரவலாக நிலை பெற்றுவிட்டது.

கடவுளை நம்புகிறவர்களுக்கு கர்மாவிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைப்பது தவிர்க்க முடியாததாகின்றது.
முற்பிறப்பு நினைவுகள்.

எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பாலைத்தேடுவதும், மனிதர் ஒருவர் மீது ஒருவர் கண்டதும் காதல் கொள்வதும் ஒருவரை நாம் எவ்வித காரணமும் இல்லாமல் வெறுக்கத் தோன்றுவதும் முற்பிறப்புகளின் ‘விட்ட குறை தொட்டகுறை” என்றே கூறவேண்டும்.

மனிதனின் மனப்பாங்கு, குணாம்சங்கள், செயல்நாட்டம், திறமை எல்லாம் முற்பிறப்பின் தொடர்ச்சியாகவே இயங்குகின்றன. ஐந்து வயது சிறவன் மிருதங்கம் கதாகாலஷேபம் செய்வதும், முற்பிறப்புகளில் வளர்த்துக் கொண்ட திறமைகளின் தொடர்ச்சிகளே.

முற்பிறப்பு அனுபவங்கள் எமது மனதின் அடி உணர்வு தளத்தில் (Sub-conscious mind) பதிந்து விடுகின்றபடியால் அவை சூட்சும நிலையில் எம்மோடு கூடவே இருந்து கொண்டு பிறப்புக்கள் தோறும் தொடர்ந்து வருகின்றன.
கனவுகளில் சில சமயங்களில் நீண்ட காலத்துக்கு முந்திய பிறப்புக்களின் அனுபவங்கள் பிரதிபலிப்பதுண்டு. ஆகாயத்தில் பறந்து செல்வது போல் நாம் கனவு காண்பது நாங்கள் பறவைகளாக இருந்த முற்பிறப்புக்களின் அனுபவங்களே.

முற்பிறப்பு ஞாபகங்கள் இயல்பாக எமக்கு இருப்பதில்லை. ஆழ்ந்த தியானத்தின் மூலம் கிடைக்கப் பெறும் ஒரு நிலையில் இருந்து முற்பிறப்புகளை அறியலாம். புத்தர் பெருமான் “அங்குத்தற நிக்காயா”வில் இந்த யோகநிலையை எப்படி பெறுவது என்று தனது சீடர்களுக்கு விளக்கியுள்ளார்.

அறிதுயில் நிலையில் பின்னோக்கிச் சென்று (Hypnotic Regression) முற்பிறப்புக்களை அறிதல் சாத்தியம் என நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அறிதுயில் நிபுணர் (Hypnotist) தனது மனோசக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள நபரின் ஞாபகச் சக்தியை தான் விரும்புவது போல் நூறு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செலுத்தித் தகவல்களைப் பெறுவார்.
இப்படியான ஒரு ஆய்வின்போது அமெரிக்காவைச் சேர்ந்த பிறைடி மேர்பி (Bridey Murphy)என்னும் பெண்மணி அயர்லாந்தில் நிகழ்ந்த தனது முற்பிறப்பை நினைவு கூர்ந்து அதன் முழு விபரங்களையும் தெரிவித்தார். அவர் தனது முற்பிறப்பு நிகழ்ந்ததாகக் கூறிய ஆண்டு அண்மைய காலமாயிருந்ததனால் தேவாலய பதிவேடுகள், அரசாங்க எழுத்துக் குறிப்புகள் மூலம் அவருடைய கூற்றுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்திலும் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டு மறுபிறப்புக்கு ஆதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
அமெரிக்காவில் கென்ரக்கி என்னும் நகரில் வாழ்ந்த எட்கர் கைஸ் (Edger Cayce) என்பவர் அறிதுயில் நிலையில் இருந்துகொண்டு மனிதர்களுடைய நோய்களைக் கண்டுபிடித்து அதற்குச் சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் கூறுவார். இவர் ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்களுடைய நோய்களுக்கு அவர்களுடைய முற்பிறப்பு “கர்மா” தான் காரணம் என்றுஅறிதுயில் நிலையில் இருந்து கொண்டு கூறினார். அவருக்குச் சுயநினைவு வந்தவுடன் “கர்மா” என்றால் என்ன என்று அவரிடம் கேட்டபொழுது அப்படியான ஒரு பதத்தை தான் கேள்விப்பட்டதேயில்லை என்றார். தனது முற்பிறப்பின் அறிவையும் ஆற்றலையுமே அறிதுயில் நிலையில் இருந்து கொண்டு வெளிப்படுத்தினார் என்று தெரிகிறது.
தியானத்தை வழிபாட்டு முறையாகக் கொண்ட இந்துக்களினதும் பௌத்தர்களினதும் மத்தியில் தான் மற்பிறப்பு ஞாபகங்கள் உள்ளவர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் கிடைத்த முற்பிறப்பு ஞாபகங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் அமெரிக்காவில் உள்ள வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் உள ஆய்வியல்துறைப் பேராசிரியர் ஐயன் ஸ்ரீவன்சன் என்பவராலும் பிறான்கிஸ் ஸ்ரோறி என்பவராலும் ஆய்வு செய்யப்பட்டன.

இவைகளில் இருபது முற்பிறப்பு சம்பவங்கள் ஆய்வுக்குறிப்புகளின் ஆதாரங்களுடன் “fate” என்னும் சஞ்சிகையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளன.

சனி, 21 ஏப்ரல், 2012

பிரச்சினைகள் இல்லாத வீடுகளே இல்லை. தம்பதியரிடையே சின்ன சண்டை வந்தாலும் அதை ஊதி பெரிதாக்காமல் தவறு யார்மீது என்று கண்டறிந்து மனதார மன்னிப்பு கேட்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் வந்த சுவடு தெரியாமல் பிரச்சினை காணமல் போய்விடும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். சொன்னதை செய்யலையா?

எங்காவது வெளியில் கூட்டிப்போகிறேன். சினிமாவுக்கு அழைத்துப்போகிறேன் என்று கூறிவிட்டு வேலைப்பளுவில் மறந்துவிட்டீர்களா? இது உங்கள் துணைக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவே தவறாமல் மன்னிப்பு கேளுங்கள். உங்களின் சூழ்நிலையை அன்போடு புரிய வையுங்கள். வேலைப் பளுவின் எரிச்சலை மனைவி மீது காட்டினால் சண்டை மேலும் அதிகமாகும்.


வெறுப்பேற்றாதீர்கள்

சின்ன சின்ன தவறுக்கெல்லாம் எதையாவது குத்திக்காட்டி வெறுப்பேற்றாதீர்கள். இது தீர்க்க முடியாத சண்டையாக மாறிவிடும். தவறு எங்கு நிகழ்ந்தது என்பதை கண்டறிந்து அதை தீர்க்க முயல வேண்டும். தவறுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முடிவு செய்தபின்னர் காலம் தாழ்த்தாமல் கேட்கவேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்

செயல்களால் உணர்த்துங்கள்

உங்கள் தவறை நீங்கள் உணர்ந்து அதற்கு மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் வெறும் வார்த்தையாக கேட்பதை விட செயலால் உணர்த்துங்கள். ப்ளீஸ் இனிமேல் அதுபோல் நடக்காது என்று சொல்வதை விட உங்கள் துணைக்கு பிடித்தமான சமையலை செய்து அசத்தலாம். உங்கள் துணைக்கு தெரியாமல் இரவு டின்னருக்கோ, சினிமாவுக்கோ புக் செய்துவிட்டு வந்து அழைத்து போகலாம். சர்ப்ரைசாக இருக்கும்.

எல்லாம் சரியா இருக்கணும்

தவறுக்கு மன்னிப்பு கேட்ட உடனே எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. கொஞ்சம் அமைதியாக இருங்கள் உடனே இருவரும் எங்காவது கிளம்பினால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தவறை உணர நேரம் கொடுங்கள். பிரச்சினையின் தன்மையை, தவறை இருவரும் யோசியுங்கள். பிறகு நடந்த தவறை மன்னித்து மறந்து விடுங்கள்.


மனிதர்களில் இரண்டு ரகம் உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம். டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது.


காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பதுதான். ஆனால் இரண்டாவது ரகமான டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டு விடுவார்கள். நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன்தான் என்று ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

இயற்கை அழகு யாருக்கு

இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். 500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், தினமும் அவர்கள் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாக இருப்பவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்கள் `ப்ரெஷ்” ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அழகிற்கும் மனதிற்கும் தொடர்பு

அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்” என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு முதுமை நம்மை அண்டாது விரட்டி விடுவோம்.

என்ன டென்சன் பார்ட்டிகளே நடப்பது நடந்துதான் தீரும் அதை மனதில் எடுத்துக்கொள்லாமல் சந்தோஷமாக இருங்கள். ஆதலால் உங்கள் டென்சனை தூக்கிப்போடுங்கள் அழகும் இளமையும் உங்களை நாடி வரும்.


ப்போதெல்லாம் செக்ஸ் பிரச்சினையில் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை புதிது புதிதான சந்தேகங்களைத் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டு அதைத் தீர்க்க வேண்டி மருத்துவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்மைக்குறைவு, விந்து சுரக்காமை, விந்து வெளியேறமை, சிறிய ஆண்குறி, இப்படி அவர்களது பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் ஒரு முக்கியமானது தான், செக்சில் ஆர்வம் குறைந்து போவது…. இது வயது ஆக ஆகக் குறைந்து போவது இயற்கை தான்.
இருந்தாலும் ஒரு சிலருக்கு, வயதாகும் முன்பே செக்சில் ஆர்வம் குறைந்து போய், திருவிழா நாட்களிலும் பெட்டிக்குள் பூட்டி வைக்கப்பட்ட புத்தாடையாய், மனைவியைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தான் வாழ்க்கையில் அவர்களுக்கு புயல் வீச ஆரம்பிக்கிறது…

சரி. செக்ஸ் உணர்வை அதிகரித்துக் கொள்ள ஏதாவது உணவு வகை இருக்கிறதா?

உடலுறவு வேட்கையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் வெங்காயம் முதலிடம் வகிக்கிறது. வெங்காயத்திலும் நாட்டு வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயம் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இதைத் தவறாமல் நாள்தோறும் உணவில் சேர்த்து வருவது நல்லது. இதன் காரணமாகத்தான் பெண் வாசனையே இன்றி இருக்க விரும்பும் ஆண்கள் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதிலும், சமைக்காத பச்சை வெங்காயமாகச் சாப்பிடும் போது தான் இதன் முழுப்பலனையும் பெற முடியும்.

இன்னும் சிலர், நமது நாட்டில் பரவலாகக் காணப்படும் வெற்றிலை போடும் பழக்கத்தாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறுவார்கள். இது தவிர, நன்கு வெயிலில் காய்ந்த ஆட்டுக்கறியை எண்ணையில் வறுத்துச் சாப்பிட்டாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அதிலும் ஆண்மைத்தன்மை சுத்தமாகக் குறைந்து போனவர்களுக்கு இது நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அனுபவரிதியாக என்னவெனச் சரியாகத் தெரியவில்லை.

மேலும்,. கடலில் காணப்படும் சிப்பி வகை (ஆய்ஸ்டர்) உணவு, ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. மேற்கூறிய உணவு வகைகள் பற்றி அவ்வளவு உறுதியான முடிவுகள் தெரியவில்லை என்றாலும்., கடைசியாகக் கூறிய, சிப்பி வகை உணவு விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


செவ்வாய், 17 ஏப்ரல், 2012


1) தொலைநோக்கியை (Telescope)
கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அவர் எத்தனையாம்
ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்?
Galileo Galilei, Italy, 1593.

2) ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு ஆகாய விமானத்தை கண்டுபிடித்தார்?
Wright Brothers, America, 1903.

3) துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தார்?
Macmillan, Scotland, Year ?.

4) மின்பிறப்பாக்கியை (Dynamo) கண்டுபிடித்தவர்
யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர்
எத்தனையாம் ஆண்டு மின்பிறப்பாக்கி
யை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1831.

5) டைனமைற்றை (Dynamite) கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?
Alfred Nobel, Sweden, 1867.

6) ஒக்சிஜனை (Oxygen) கண்டுபிடித்தவர் யார்? அவர்
எத்தனையாம் ஆண்டு ஒக்சிஜனை கண்டுபிடித்தார்?
Joseph Priestley on 01 – August – 1774.

7) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர்
யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர்
எத்தனையாம்
ஆண்டு தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தார்?
John Logie Baird, England, 1926. (Born in Scotland)

8) தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எத்தனையாம்
ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்தார்?
Alexander Graham Bell, 1876.

9) தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்?
Henry Mill, England, 1714. 10) பென்சிலினை (Penicillin) கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு பென்சிலினை கண்டுபிடித்தார்?
Allen Fleming, Scotland, 1928.

11) மின்மாற்றியை (Transformer ) கண்டுபிடித்தவர்
யார்? அவர் எத்தனையாம்
ஆண்டு மின்மாற்றியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, 1831 — William Stanley, 1885
(Modern Transformer)

12) மின்கலத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு மின்கலத்தை கண்டுபிடித்தார்?
Anastasio Volta , Italy, 1807.

13) குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர்
யார்? அவர் எத்தனையாம் ஆண்டு குருதிச்
சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார்?
William Harvey, 1628.

14) புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார்?
Isaac Newton, England, 1687.

15) Transistor இனை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எத்தனையாம் ஆண்டு Transistor
இனை கண்டுபிடித்தார்?
மூன்று பௌதீகவியலாளர்களின்
கூட்டு முயற்சியால் Transistor
கண்டுபிடிக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரம்:- John Bardeen, Walter Brattain, William Shockley,
1947.

16) கணனியை (Automatic Calculator)
கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அவர் எத்தனையாம்
ஆண்டு கணனியை கண்டுபிடித்தார்?
Wilhelm Schickard , German, 1623.

17) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண்
யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர்
எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற்
சிகரத்தை சென்றடைந்தார்?
Junko Tabei, Japan, 16 – May – 1975.

18) இரசாயணவியலில் நோபல் பரிசு பெற்ற
தம்பதிகள் யார்? அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
அவர்கள் எத்தனையாம் ஆண்டு நோபல்
பரிசினை பெற்றார்கள்?
Frederic Joliot & Irene Curie, France, 1935.

19) வட துருவத்தை சென்றடைந்த முதல் மனிதன் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த ஆண்டில்
வட துருவத்தை சென்றடைந்தார்?
Robert Edwin Peary, American, 06 – April – 1909.

20) துணைக்கோள்களற்ற (Moons)
இரண்டு கோள்கள் எவை?
Mercury, Venus.

21) அணு குண்டை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு அணு குண்டை கண்டுபிடித்தார்?
Robert Oppenheimer, America, 1945.

22) மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்
விளக்கை கண்டுபிடித்தார்?
Thomas Alva Edison, America, 1879.
23) ஒலிபெருக்கியை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு ஒலிபெருக்கியை கண்டுபிடித்தார்?
Horace Short, Britain, 1900.

24) நுணுக்குக்காட்டியை (Microscope)
கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அவர் எத்தனையாம் ஆண்டு நுணுக்குக்காட்ட
ியை கண்டுபிடித்தார்?
Janssen, Netherlands, 1590.

25) பக்ரீரியாவை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு பக்ரீரியாவை கண்டுபிடித்தார்?
Leeuwenhock, Netherlands, 1683.

26) வாயு அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு வாயு அடுப்பை கண்டுபிடித்தார்?
Robert Wilhelm Bunsen, Germany, 1855.

27) இரும்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு இரும்பை கண்டுபிடித்தார்?
Henry Bessemer, England, 1856.

28) Benzene இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு Benzene இனை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1825.

29) X – ray இனை கண்டுபிடித்தவர் யார்?அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு X -
ray இனை கண்டுபிடித்தார்?
Wilhelm Conrad Rontgen, German, 1895.

30) X – ray இனை கண்டுபிடித்தவரு
க்கு எத்தனையாம் ஆண்டு நோபல்
பரிசு வழங்கப்பட்டது?
1901 ஆம் ஆண்டு (First Nobel Prize for Physics In
History)
தொடரும்…

திங்கள், 16 ஏப்ரல், 2012

உடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிறதே என்று இன்றைக்கு பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இடுப்பும் பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கேற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல்கள் எழுகின்றன. எனவே பின்புறத்தை அழகாக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் அனைவருமே எதிர்கொள்ளும் ஒரு சிக்கல் பின்புறம் பெருத்துவிடுவதுதான். இதற்கு காரணம் ஒரே நேரத்தில் அதிக நேரம் உட்காரும்போது ப்ரிடிபோசைட் செல்கள் கொழுப்பு செல்களாக மாற்றம் பெறுகிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக நேரம் கம்ப்யூட்டர், இன்டர்நெட் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் ஆய்வு மேற்கொண்டதில் இது கண்டறியப்பட்டுள்ளது.




அசையாமல் அமர்ந்திருப்பது

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதனால் ஏற்படும் உடல்களில் ஏற்படும் அழுத்தம் அந்த இடங்களில் உள்ள செல்கள் விரைவாக அதிகரிக்கும். இதனால் அப்பகுதிகளில் கொழுப்பு அதிகரிக்கும்.

இது ‘மெக்கானிகல் ஸ்ட்ரெச்சிங் லோட்ஸ்’ எனப்படுகிறது. ஒரே இடத்தில் அசைவின்றி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

உடலின் மற்ற பகுதிகளைவிட ‘சீட்’ பகுதியில் கொழுப்பு செல்கள் சீக்கிரம் அதிகரிக்கும். இதனால் அந்த பகுதியில் மட்டும் அதிக சதை போடும் இதை தவிர்க்க போதிய உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம். அது மட்டுமின்றி, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி எழுந்து நடக்கவேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அழகாக உடற்பயிற்சி

முதலில் நேராக நின்றுகொண்டு தோள்களின் மீது நீளமாக ஒரு கட்டையை வைத்துக்கொள்ளவும். இரண்டு கைகளாலும் அந்த கட்டையை பிடித்துக்கொண்டு தலையை முன்னோக்கி நீட்டியவாறு முதுகுவரை வளைக்கவும். இதனால் பின்புறம் அழகாகும்.

உயரமான தூண் உள்ள பகுதியில் நின்று கொள்ளவும். அதனை பிடித்துக்கொண்டு வலதுகாலை பின்னோக்கி மடக்கவும், பத்துமுறை செய்யவும். அதேபோல் இடதுகாலையும் பின்னோக்கி மடக்கி நீட்டவும். இவ்வாறு செய்தால் கால் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். பின்புறம் டைட்டாக மாறி அழகாகும்.

ஆசனத்தை விரித்து முழங்கையை ஊன்றி குப்புற படுத்துக்கொள்ளவும். பின்னர் ஒருகாலை பின்னோக்கி மடக்கவும். இதோபோல் இருகால்களையும் பத்துமுறை மடக்கி நீட்டவும். இதேபோன்ற பயிற்சிகளை தொடர்ந்து காலையிலும், மாலையிலும் செய்துவர அழகான இடுப்பும், பின்பகுதியும் அழகாக மாறும் என்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அப்புறமென்ன கண்ணைக்கவரும் ஆடைகளை அணிந்து அழகாக தோற்றமளிக்கலாம்.
எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை கறுப்பு மை பூசி மறைத்து வைப்பது ஆண்களின் வழக்கம். எப்போது வயதைக் கேட்டாலும் நான்கைந்து குறைத்தே சொல்வது பெண்களின் பழக்கம். இந்த வழக்கத்துக்கும் பழக்கத்துக்கும் ஒரே காரணம், ‘இளமை’ மனப்பான்மை. அது சரி… என்றும் இளமையாகவே இருக்க முடியுமா?

‘யார் தடுத்தாலும் நில்லாமல் முன்னேறிச் செல்லும் ஜல்லிக்கட்டுக் காளைதான் வயசு. ஆனால், உணவுப் பழக்கம் என்கிற மூக்கணாங்கயிறு கொண்டு


ஓரளவு உடலைக் கட்டுக்குலையாமல் வைக்கலாம்’ என்கிறார்கள் உணவு நிபுணர்கள். ‘நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் நியூட்ரிஷன்’ அளவீடுகளை

மேற்கோள் காட்டி, இளமையை இழுத்துப் பிடிக்க 20 வழிகளைப் பட்டியலிடுகிறார், சென்னை பிங்க் ஃபிட்னஸ் ஸ்டூடியோ ஊட்டச்சத்து நிபுணர்

ரிஸ்மியா முகைதீன்.

1. மூன்று வேளை சாப்பாடு என்பதே பொதுவான நடைமுறை. இந்த 3 உணவுவேளைகளுக்கு இடையிலும் ஏதாவது சாப்பிட வேண்டும். சுண்டல்,

ஓட்ஸ், சாலட், ஜூஸ், மோர்… இப்படி! குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடுவதால் உடலின் வளர்சிதைமாற்றம் நல்லபடி நிகழும். ஆரோக்கியம்

மேம்பட இது அவசியம்.

2. காலை உணவை திருப்தியாகச் சாப்பிடலாம். மதியம் வயிறு முட்டச் சாப்பிட்டால் தேவையற்ற தூக்கம் வரும். இரவில் அதிகம் சாப்பிட்டாலோ

தூக்கம் பாதிக்கப்படும். ஆண்களுக்கு தினம் 2425 கலோரியும் பெண்களுக்கு 1875 கலோரியும் அனுமதிக்கப்பட்ட அளவு.

3. கார்போஹைட்ரேட் (50%), புரதம் (30%), கொழுப்பு (15%), வைட்டமின்கள், தாது உப்புகள் (5%)  இவையெல்லாம் அடங்கிய உணவே சரிவிகித

உணவு. நமது டயட்டில் இவை அனைத்தும் இருக்க வேண்டும்.

4. ஒருமுறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும். நாம் பொதுவாக அதிகபட்சம் 7 முறையே மெல்லுகிறோம்.

5. வாரம் ஒருமுறையாவது கீரை அவசியம். கீரையின் நார்ச்சத்துகள் கொழுப்பைக் கரைக்கின்றன.

6. உடலின் இறந்த செல்களை நீக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த காய் கனிகளை நிறைய சாப்பிட வேண்டும்.

7. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிடலாம். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் ஊற வைத்த வெந்தயத்தை மென்று

தண்ணீர் குடிக்கலாம்.

8. தினமும் கைப்பிடியளவு பாதாம் அல்லது வேர்க்கடலை சாப்பிட வேண்டும். ‘பாதாம் நிறைய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடும்’ என்பது தவறான

கருத்து. தினம் ஒரு பேரீச்சை சாப்பிடலாம்.

9. மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதம் ஒன்றரை லிட்டர் சமையல் எண்ணெய் போதும். நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என மாற்றி

மாற்றி உபயோகிக்கலாம்.

10. பாமாயில், வனஸ்பதி, நெய் போன்றவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. கொழுப்பு கூடுகிறது இவற்றால்.

11. தவிர்க்கமுடியாவிட்டால், வாரம் இரண்டு நாள்கள் சிக்கன் எடுக்கலாம். எண்ணெயில் வறுப்பதைத் தவிர்த்து, குழம்பில் சேர்த்துச் சாப்பிடுவதே

பெஸ்ட். இரவில் அசைவம் வேண்டாம்.

12. மட்டன், பீஃப் வேண்டுமென்றால் மாதத்தில் ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.

13. சராசரி மனிதன் ஒருநாளைக்குக் குடிக்க வேண்டிய தண்ணீர் இரண்டரை லிட்டர்.

14. சிறிய பங்களிப்புதான் என்றாலும் உப்பும் சர்க்கரையும் தேடாத நாக்கே இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் 2 முதல்

3 டீஸ்பூன் சர்க்கரை என்பது ஆரோக்கிய அளவு.

15. பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்கலாம். அவை கெட்டுப்போகாமலிருக்க எண்ணெயும் உப்பும் அதிகம் சேர்த்திருப்பார்கள்.

16. தினமும் 2 கப் காபி பருகலாம். கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது.

17. இரவில் படுக்கப்போகும் முன் சர்க்கரை சேர்க்காமல் ஒரு டம்ளர் பால் அருந்தலாம்.

18. கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோயைத் தடுக்கும் ‘ஒமேகா 3 ஃபேட்டி அமிலம்’ மீன்களில் அதிகமுள்ளது. வாரம் இருமுறை சேர்க்கலாம்.

19. குளிர்பானங்களை ஒதுக்குவது நல்லது. பழச்சாற்றில் அதிகம் தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம்.

20. உணவுப் பழக்கங்களால் வாயைக் கட்டிப் போட்டு வைத்தாலும், உடற்பயிற்சி மிகமிக முக்கியம். தினமும் ஒருமணி நேரமாவது அவசியம்.


பின்பற்றுபவர்கள்