amutha malai polikirathu

திங்கள், 9 ஏப்ரல், 2012

தம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு மகிழ்ச்சிகரமானது, ஆரோக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்கள் தாம்பத்ய உறவை விரும்ப மகிழ்ச்சியைத் தவிர்த்து பல்வேறு காரணங்கள் இருக்கிறதாம். எந்தெந்த காரணத்திற்காக அவர்கள் உறவை விரும்புகின்றனர் என்று உளவியல் நிபுணர்கள் பட்டியல் இட்டுள்ளனர். படித்துப் பாருங்களேன்.

தாம்பத்ய உறவானது உடல் தொடர்புடையது மட்டுமல்ல மனது தொடர்பானதும் கூட. 30 நிமிட சந்தோசத்தில் சுரக்கும் காதல் ஹார்மோன்களினால் மன அழுத்தம் பறந்து போகிறது. உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மகிழ்ச்சியான மனநிலை

உறவின் மூலம் முதற்கட்டமாக பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதாம். தன்னுடைய வாழ்க்கைத் துணைவருடனான உடல் ரீதியான உறவை மிகவும் அனுபவித்து ஈடுபடுகின்றனராம். இதற்காகவே அவர்கள் செக்ஸினை விரும்புகின்றனராம்.

மன அழுத்தம் போகும்

தாம்பத்ய உறவின் மூலம் மனஅழுத்தம் நீங்குகிறதாம். எத்தனை கடினமான வேலை செய்து விட்டு உடல் களைப்போடு வந்தாலும் துணைவருடனான உறவில் ஈடுபட்டால் எல்லாமே பறந்து போகிறதாம். களைப்பு நீங்கி நன்றாக உறக்கம் வருகிறதாம்.

எடை குறைகிறது

செக்ஸ் ஒரு சிறந்த எக்ஸர்சைஸ் என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய துணைவருடனான உறவின் மூலம் உடலில் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகிறது. அதனால் தாம்பத்ய உறவை மகிழ்ச்சியுடன் விரும்புகிறேன் என்கின்றனர் பெண்கள்.

போர் அடித்தால்

தாம்பத்ய உறவானது துணைவருடனான காதல் பிணைப்பை அதிகரிக்கிறது. இதனால் வாழ்க்கையில் போர் அடிக்காது. தம்பதியரிடையே ஏற்படும் சின்ன சின்ன பிணக்குகளை நீக்குகிறது என்கின்றனர்.
இத்தகைய காரணங்களுக்காகவே பெண்கள் தாம்பத்ய உறவை விரும்புகின்றனராம். உங்க கதை எப்படி? இதோட கொஞ்சமாவது ஒத்துவருதா?

0 comments :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்