amutha malai polikirathu

செவ்வாய், 14 மே, 2013

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதை மயக்கும் சிவப்பு


பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர். காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது.
தாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒட்டம் சீரடைகிறதாம். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் குணமடைந்து உற்சாகம் அதிகரிக்குமாம்.

ரத்த ஓட்டம் சீராகும்
செக்ஸ் உறவின் கிளைமேக்ஸில் பெண்களுக்கு பீறிட்டுக் கிளம்பும் உணர்வுகளால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம். பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.

குணமடையும் இதயநோய்கள்
உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும். அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம் தொடர்பான நோய்களை போக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு நன்மைகள் பல ஏற்படுகிறது.

சனி, 4 மே, 2013

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மிகவும் குழம்பியிருக்கிறார்கள். பலதரப்பட்ட கருத்துகள், முடிவு எடுக்கத் தெரியாத ஒரு நிலை. இவை எல்லாம் குழப்பத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது, எப்படி அணுகுவது, யாருடைய கருத்தை நாடுவது என்று தடுமாற்றம். கடைசியில் எதையோ தேர்ந்தெடுத்து வேறு வழியில்லாமல் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. கலாசாரம் என்ற பெயரில் சிறு வயதிலிருந்தே அவர்களை முடிவு எடுக்க விடுவதேயில்லை. ஒரு மாணவன் சார்பில் எப்பொழுதும் முடிவுகளை எடுப்பது தாய், தந்தையர் (அ) ஆசிரியர்கள் (அ) குடும்பத்திற்குத் தெரிந்த ஓர் அனுபவஸ்தர். சுயமாகத் தனக்கு என்ன வேண்டுமென்று முடிவு எடுக்கத் தெரியாததாலேயே குழப்பம் மென்மேலும் மேலோங்கி நிற்கிறது.

ஒரு காலகட்டத்தில் அரசு வேலை () வங்கி வேலையே சிறந்தது என்று கருதப்பட்டது. அதற்குக் காரணம் ஒருமுறை வேலையில் சேர்ந்தால் ஓய்வு பெறும்வரை பிரச்சினைகள் கிடையாது. திருமணத்துக்குக் கூட இது ஒரு முக்கியமான தகுதியாக இருந்தது. மேலும் சொந்தத் தொழில் செய்தவர்கள் எல்லோரும் ஒரு பின்னணியை நம்பி வாழ்ந்தவர்கள். வாய்ப்புகள் இருந்தன. ஆனால் குறைவு.

இன்றைக்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஏராளமான துறைகள். எவ்வளவு துறைகள் இருந்தாலும் ஒரு நிறுவனத்துக்குத் தூண் போல் நிற்பது மார்கெட்டிங் துறையே. இத் துறை இல்லாத நிறுவனமே கிடையாது.
மார்க்கெட்டிங் என்பது வெறும் பொருள்களை விற்பது மட்டுமல்ல. அது ஒரு Behavior. மனிதர்களை உறவு வகையில் பொருள்களுடன் இணைக்கிறது. நாம் பிறந்த நிமிஷத்திலிருந்து நாம் நம்மை மார்க்கெட் செய்து கொண்டுதான் இருக்கிறோம். எல்லா காலகட்டத்திலேயும் நம்மை மார்க்கெட் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பொருளை நாம் நம்முடன் சேர்ந்து மார்க்கெட் செய்யும்பொழுது அது மேம்பட்டு நிற்கிறது.

பின்பற்றுபவர்கள்